ரேஷன் கடைகள் இனி ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் இனி ஞாயிற்றுக்கிழமையும் திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்குப் பதிலாகவெள்ளிக்கிழமைகள் இனி விடுமுறை தினமாக இருக்கும்.
அனைத்து நிறுவனங்கள், வேலை பார்ப்போருக்கு ஞாயிற்றுக்கிழமைதான் விடுமுறை தினமாக இருக்கிறது. ஆனால், அந்த தினங்களில்ரேசன் கடைகள் மூடப்படுகின்றன. இதனால் வேலைக்குப் போவோரால் ரேஷன் பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
மேலும் அரிசி போன்றவற்றை குடும்பத் தலைவர்களே வந்து வாங்க வேண்டும் என்று புதிய நடைமுறை வேறுஅமல்படுத்தப்பட்டிருப்பதால், ஞாயிற்றுக்கிழமையன்று ரேஷன் கடைகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதற்குப் பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இது அமலுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications