கம்யூட்டர்மயமானது ஜெயலலிதாவின் ஆண்டிப்பட்டி அலுவலகம்
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
முதல்வர் ஜெயலலிதாவின் ஆண்டிப்பட்டி அலுவலகம் கம்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது.
மக்கள் தரும் மனுக்களை கம்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் சென்னைக்கு அனுப்பப்படுகின்றன.
முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டியில் எம்.எல்.ஏ. அலுவலகம் கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது. இங்கு தரப்படும்மனுக்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டு சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இப்போது பஸ்களில் மூட்டை மூட்டையாக அனுப்பப்பட்டு வரும் இந்த மனுக்கள், இனிமேல் கம்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு இ-மெயில்மூலமே சென்னைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளன.
பெரியகுளம் எம்.பி தினகரன் அல்லது எம்.பி. தங்கதமிழ் செல்வன் ஆகியோரில் ஒருவர், ஊரில் இருந்தால், மனுக்களை நேரடியாகப் பெற்றுஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications