ஏட்டுச் சுரைக்காய்!
சென்னை:
தமிழகத்தில் பள்ளி நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டதற்கு பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை ஒறு அறிவிப்பை வெளியிட்டடது. அதன்படி கிராமப்புறப் பள்ளிகள் காலை 9 மணிக்குத் துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும்என்றும் நகர்ப்புறப் பள்ளிகள் காலை 8.30 மணிக்குத் துவங்கி 4.30 மணிக்கு முடிவடையும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதன்மூலம் பள்ளிகளின் நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.
இது தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், பெற்றோர்களிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
8 மணி நேரம் ஒரு மாணவனோ அல்லது மாணவியோ பள்ளியில் படித்தால் அவர்களது மன நிலையும், உடல் நிலையும் பாதிக்கும் என்று பல்வேறுஅமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆசிரியர்களை அதிக நேரம் வேலை வாங்கும் திட்டத்துடன் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டது. ஆனால், இதனால் கல்வித் தரம் கூடப் போவதில்லைஎன்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.
தங்கள் குழந்தைகள் வெறும் படிப்பு தவிர வேறு விஷயங்களிலும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் பெற்றோர் இடையே அதிகரித்துவருகிறது. இதனால் விளையாட்டு, பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ், தியானம் கிளாஸ் என மாலை நேரங்களில் பலவிதமான நல்ல விஷயங்களில் குழந்தைகளைஈடுபடுத்தி வருகின்றனர்.
இதன் பிறகு டியூசன் ஆரம்பித்துவிடுகிறது. இந் நிலையில் பள்ளி நேரத்தை அதிகரித்தால் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாக தங்கள குழந்தைகள் மாறவேண்டிய நிலை ஏற்படும் என பெற்றோர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அரசின் அறிவிப்பில் மாற்றம்:
பெற்றோர் இடையே இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், பள்ளி நேரங்களில் சமீபத்தில் அறிவித்த மாற்றத்தில்சிறு திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இதன்படி கடைசி பீரியட் கட்டாயம் இல்லை. மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அந்த பீரியடை நடத்தலாம் அல்லது ரத்து செய்யலாம்என்று தற்போது அரசு கூறியுள்ளது.
பள்ளிகளுக்கு அரசு அறிவித்துள்ள புதிய பீரியட் விவரம்:
காலையில் பள்ளி துவங்கும் முன் 15 நிமிடம் கடவுள் வழிபாட்டுக்கு ஒதுக்க வேண்டும். அதன் பின் வகுப்புகள் துவங்கும். காலையில்மொத்தம் நான்கு பீரியட்கள் (வகுப்புகள்) இருக்கும், ஒவ்வொரு பீரியடும் தலா 45 நிமிடங்கள் நடக்கும்.
இதில் இரண்டு பீரியட் முடிந்தவுடன் 10 நிமிட இடைவெளி விடப்பட வேண்டும். பிற்பகலில் 4 பீரியட்கள் இருக்கும். அது 40 நிமிடஅளவாக இருக்கும். இதிலும் 2 பீரியட்களுக்கு மத்தியில் 10 நிமிட இடைவெளி விடப்பட வேண்டும்.
இதில் கடைசி பீரியட் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப இருக்கும். அவர்கள் விரும்பினால் நடத்தலாம். இல்லாவிட்டால் ரத்துசெய்துவிடலாம். கடைசி வகுப்பு குறித்த அரசின் இந்த அறிவிப்பு மேலும் குழப்பங்களைத் தான் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications