புதுமைப்பித்தன் நூல்கள் நாட்டுடமையாக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன் மற்றும் கு.ப.ரா. சேது அம்மாள் ஆகியோரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.

இனி அவர்களது நூல்களையும், படைப்புகளையும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதற்கு ஈடாக இரு எழுத்தாளர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ. 5 லட்சம்வழங்கப்பட்டது.

புதுமைப்பித்தனின் 97 சிறுகதைகள், 50 கட்டுரைகள், முசோலினி மற்றும் ஹிட்லர் குறித்து எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள், பல்வேறுமொழிபெயர்ப்புக் கட்டுரைகள் ஆகியவை நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.

பிரபல எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் தங்கைதான் கு.ப.ரா. சேது அம்மாள். தற்போது 94 வயதாகும் அவர், 119 சிறுகதைகள், எட்டுநாவல்கள், 4 சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு மத சம்பந்தமான நூல்கள், அகில இந்திய வானொலியில் ஆற்றிய 10 உரைகள் ஆகியபடைப்புகளை வைத்துள்ளார்.

தனது குடும்பம் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், எனவே தனது படைப்புகளை நாட்டுடமையாக்கி அதற்கு ஈடான தொகையை தனதுசகோதரர் கு.ப.ராஜகோபாலனின் மகன் பட்டாபிராமனிடம் வழங்குமாறு சேது அம்மாள் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதை ஏற்று அவரது நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டள்ளன.

இரண்டு எழுத்தாளர்களும் அந்தக் காலத்தின் பிரபல இலக்கிய இதழான மணிக்கொடி பத்திரிக்கையில் எழுதி வளர்ந்தவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+