திருச்சியை சுத்தமாக்க ரூ. 2.5 கோடி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி நகரில் குப்பைகளே கிடையாது என்று புகழும் அளவுக்கு நகரில் குப்பைகளை ஒழிப்பதில் மாநகராட்சி தீவிர கவனம் செலுத்திவருவதாக மேயர் சாருபாலா தொண்டமான் கூறியுள்ளார்.
திருச்சியில் நிகழ்ச்சியொன்றில் அவர் பேசுகையில், நகரில் குப்பைகளை அகற்றுவதற்காக ரூ. 2.5 கோடி செலவில் பல்வேறு திட்டங்கள்செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் நகர் முழுவதிலும் 25 இடங்களில் துப்புறவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு ஆண்களுக்கு, பெண்களுக்கு, குழந்தைகளுக்கு என 3 வகை கழிப்பறைகள், குளியலறைகள், துவைக்கும் இடம் ஆகியவைஅடங்கியிருக்கும்.
இதுதவிர நகர் முழுவதிலும் குப்பைகளை சேகரத்து அகற்றுவதற்காக சிறப்புத் திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications