கலாமை ஜனாபதியாக்குவது சரியல்ல: லட்சுமி செகல்
டெல்லி:
இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில் அணு விஞ்ஞானியான டாக்டர் அப்துல்கலாமை ஜனாதிபதியாக்குவது உலக அளவில் இந்தியா குறித்து தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் எனஅவரை எதிர்த்துப் போட்டியிடும் கேப்டன் லட்சுமி செகல் கூறினார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கேப்டன் லட்சுமி செகல் வரும் 21ம் தேதி மனுத் தாக்கல்செய்கிறார்.
இடதுசாரிக் கட்சிகளும் மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து அவரது வேட்பு மனுவை முன்மொழிய உள்ளன.
இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய லட்சுமி செகல் கூறியதாவது:
விஞ்ஞானி அப்துல் கலாமின் அறிவியல் சாதனைகளைக் கண்டு அதிசயித்த மக்களில் நானும் ஒருவள். ஆனால்,நான் எதிர்த்துப் போட்டியிடுவது பா.ஜ.கவுக்கு எதிராகத் தான். கலாமுக்கு எதிராக என்னிடம் எந்தக் கருத்தும்இல்லை.
மதவாதம் தான் இன்று தேசத்துக்கு எதிரான மிகப் பெரிய பிரச்சனை. மதவாத பா.ஜ.க. தனது நாட்டின்ஜனாதிபதியாக அணு விஞ்ஞானியைக் கொண்டு வந்து உலகுக்கு இந்தியா குறித்து தவறான கண்ணோட்டத்தைஏற்படுத்த முயல்கின்றனர்.
அவரை எதிர்த்து நின்று நான் தோற்கப் போகிறேன். ஆனாலும் போட்டி போட்டி தானே என்றார்.
அவருக்கு ஆதரவாக அனைத்து மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்யவும் இடதுசாரிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.குஜராத்தில் இருந்து இந்தப் பிரச்சாரத்தை தொடங்கவும் திட்டமிட்டுள்ளன. வரும் 25ம் தேதி குஜராத் செல்லும்லட்சுமி செகல் அங்கு நிவாரண முகாம்களைப் பார்வையிடுகிறார். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேசுகிறார்.
பின்னர் எம்.பி., எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆதரவு கோருகிறார். பின்னர் பிகார், மேற்கு வங்கம் சென்று தனக்குஆதரவு திரட்டுகிறார்.
இது தொடர்பாக இன்று மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள்ஆலோசனை நடத்தின.
லட்சுமி செகலும் தமிழர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நேதாஜியின் ராணுவத்தில் இணைந்து தேசவிடுதலைக்காக போராடிய வீரப் பெண்மணி இவர்.