கலாமுக்காக டெல்லி வந்த நாயுடு
டெல்லி:
அப்துல் கலாமை ஜனாதிபதியாக்க வேண்டும் பிரதமரை வலியுறுத்திய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும்ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு இன்று டெல்லி வந்தார்.
நேராக கலாம் தங்கியிருந்த விருந்தினர் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து தனது வாழ்த்துக்களைத்தெரிவித்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய நாயுடு, நாட்டின் பிரச்சனைகளை தொழில்நுட்பம் மூலம் தான்தீர்க்க முடியும் என தன்னிடம் கலாம் தெரிவித்ததாகக் கூறினார்.
கலாம் மனு தாக்கல் செய்யும்போது உடன் இருக்க வேண்டும் என்பற்காக அவர் டெல்லி வந்துள்ளார். வாஜ்பாய்முன்மொழியும் கலாமின் வேட்பு மனுவை நாயுடு வழிமொழிந்தார்.
த வீக் இதழுக்கு நாயுடு தந்துள்ள பேட்டியில், நான் கடந்த வாரம் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து கலாமைஜனாதிபதியாக்க வேண்டும் என்று வலியுறுத்திவிட்டு ஹைதராபாத்துக்கு விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தேன்.அப்போது கலாமை ஜனாதிபதியாக்க முயற்சி செய்தற்காக விமானத்தின் பைலட்கள், ஏர்-ஹோஸ்டஸ்கள், சகபயணிகள் அனைவரும் என்னிடம் வந்து நன்றி தெரிவித்தனர். அப்போது தான் அவருக்கு மக்கள் மத்தியில் உள்ளமதிப்பு எனக்கு முழுமையாக புரிந்தது என்று கூறியுள்ளார்.
நாட்டின் பிரச்சனைகளை தொழில்நுட்பம் மூலம் தான் தீர்க்க முடியும் என தன்னிடம் கலாம் தெரிவித்ததாக நாயுடுகூறினார்.












Click it and Unblock the Notifications