மாநகராட்சியில் மக்கள் குறை கேட்ட ஸ்டாலின்
சென்னை:
மேயராக தொடர்ந்து இருப்பாரா இல்லையா என்று சந்தேகத்தில் உள்ள ஸ்டாலின் இன்று மாநகராட்சியில் பொதுமக்களைச் சந்தித்து குறை கேட்டார்.
அவரிடம் பல பொது மக்கள் மனுக்களை அளித்தனர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்தபோது மக்களின் குறைகளைநீக்க முடிந்தது. மக்கள் நலத் திட்டங்களை நல்ல முறையில் அமல்படுத்த முடிந்தது.
ஆனால், கடந்த ஓராண்டு காலமாக அதிமுக ஆட்சியில் தொடர்ந்து மேயராக உள்ள எனக்கு இடைஞ்சல் தந்தனர்.எந்தத் திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்த விடவில்லை.
இன்று நீதிமன்றத் தீர்ப்பு எனக்கு எதிராக இருந்தால், எனது பதவி போய்விடும். ஆனாலும் இந்த மாமன்றத்தில்உள்ள திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து மக்களுக்காக குரல் எழுப்புவார்கள் என்றார்.
இன்று ஸ்டாலினை மாமன்றத்தில் பார்த்த பல திமுக கவுன்சிலர்களும் உணர்ச்சிவசப்பட்டனர். அவரைப்பார்த்தவுடன் வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.