For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சாவூர் வரும் ஜெவுக்கு எதிராக கருப்புக் கொடி

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

வரும் 24ம் தேதி தஞ்சாவூர் வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் முடிவுசெய்துள்ளனர்.

கரும்புக்கு அதிக விலை கிடைக்கச் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இந்தப்போராட்டத்தை நடத்த கரும்பு விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு திமுக விவசாயப் பிரிவும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஜெயலலிதா தஞ்சாவூர் வரும்போதுஅவருக்கு எதிராக திமுகவினரும் கருப்புக் கொடி காட்டவுள்ளனர்.

தென்னக பண்பாட்டு மன்றக் கட்டடத்தைத் திறந்து வைக்க ஜெயலலிதா தஞ்சாவூர் வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X