For Daily Alerts
Just In
சென்னை திரும்பினார் கலாம்: பல்கலைக்கழகத்தில் மீண்டும் பாடம் நடத்த தொடங்கினார்
சென்னை:
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்ய டெல்லிசென்றிருந்த பிரபல அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" அப்துல் கலாம் நேற்று (புதன்கிழமை) இரவு சென்னைதிரும்பினார்.
இன்று காலை முதல் மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது பேராசிரியர் பணியைத் தொடங்கினார்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தி வருகிறார்.டெல்லியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு இன்று மீண்டும் அவர் கிளாஸ் ரூமுக்குத் திரும்பிவிட்டார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் முடியும் வரை சென்னையிலேயே இருந்து தனது ஆராய்ச்சியையும், மாணவர்களுக்குபாடம் சொல்லிக் கொடுக்கவும் அப்துல் கலாம் தீர்மானத்துள்ளார்.
இடையில் வரும் 23ம் தேதி ஹைதராபாத் சென்று பள்ளி மாணவர்களிடையே உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார்.
Story first published: Thursday, June 20, 2002, 5:30 [IST]