பி.ஈ. மாணவர் சேர்க்கை 27ம் தேதி தொடங்குகிறது
சென்னை:
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் வரும் 27ம் தேதிதொடங்குகிறது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலகுருசாமி நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 68,310 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில்1,194 பேர் பி.ஆர்க் (Bachelor of Architecture) பாடப் பிரிவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கானகவுன்சிலிங் 24ம் தேதி நடக்கும்.
வொகேசனல் தொழிற் பயிற்சிப் பாடங்களில் சேர 1,972 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு 25 மற்றும்26ம் தேதி கவுன்சிலிங் நடக்கும்.
மீதமுள்ள 65,244 மாணவர்களும் பிற பொறியியல் பாடங்களில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.இவர்களுக்கான கவுன்சிலிங் 27ம் தேதி தொடங்கும்.
சென்னை மட்டுமின்றி மதுரை, கோவை, திருச்சி நகரங்களிலும் இந்த ஆண்டு கவுன்சிலிங் நடக்கவுள்ளது. இதனால்எல்லா மாணவர்களும் சென்னைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.
இந்த ஆண்டு முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு 6 மாதம் தொழில் பயிற்சி தரவும்முடிவு செய்துள்ளோம்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளதால் டாக்டர் அப்துல் கலாம் பேராசிரியர் பொறப்பில் இருந்துவிடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து பேராசிரியராக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதுதொடர்பாக அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
கலாமின் சேவை எங்களுக்குத் தேவை. பேராசியராக இல்லாவிட்டாலும் பல்கலைக்கழக மாணவர்களுக்குஅனைத்து வகைகளிலும் உதவ அவர் முன் வந்துள்ளார். பேராசிரியராக அவர் தொடர வேண்டும் என்று நாங்கள்விரும்புகிறோம்.
இந்தியாவிலேயே முதல் தரமான பல்கலைக்கழகம் என்ற பெருமையை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.இதனை உலகின் முதல் தரமான பல்கலைக்கழகமாக மாற்றுவோம் என்றார் பாலகுருசாமி.












Click it and Unblock the Notifications