பழி வாங்குவதே அரசுக்கு வேலையாகிவிட்டது: இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

முதல்வர் ஜெயலலிதாவின் ஊழல்களை சட்டசபையில் புள்ளி விவரங்களுடன் ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசியதால்தான் அவரது மேயர் பதவியைப் பறிக்க அரசு சட்டம் கொண்டு வரப்பட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறினார்.

கோவையில் நிருபர்களிடம் பேசிய அவர்,

பழி வாங்கும் நடவடிக்கைகளில் தான் தமிழக அரசு அக்கறை செலுத்தி வருகிறது.

சைதாப்பேட்டை தொகுதியில் 53 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையர்மிருத்யுஞ்சய் சாரங்கி பரிந்துரை செய்ததால் அவரை பதவியில் இருந்து நீக்க தமிழக அரசு முயன்றது.

இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார். சாரங்கியைத் தூக்கிவிட்டு இவரைப்போடுங்கள் என்று ஒருவரது பெயரையும் பரிந்துரை செய்தார்.

ஆனால், ஜெயலலிதாவின் கோரிக்யைை தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது. ஜெயலலிதாவின் இந்தச் செயல்இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது.

முறைகேடு நடந்ததால் மறு தேர்தல் நடத்தச் சொன்னார் சாரங்கி. இது தவறா? உடனே அவரை மாற்றி பழி வாங்கத்துடிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

நான் நேற்றே சொன்னது போல கராத்தே தியாகராஜன் போன்றவர்கள் மேயராகப் பதவியேற்றதன் மூலம் இனிரெளடிகள் மேயராகலாம் என்ற கேவலமாக நிலைமை உருவாகிவிட்டது.

காங்கிரஸ்- த.மா.கா. இணைந்த பிறகு இரு கட்சிகளிலும் உள்ள கருத்து வேறுபாடுகள் மறையும் என்றார்இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+