பாளை. சிறையிலிருந்து 3 கைதிகள் "எஸ்கேப்"
திருநெல்வேலி:
பாளையங்கோட்டை சிறையிலிருந்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 2 பேர் உள்பட 3கைதிகள் தப்பிச் சென்று விட்டனர்.
உள் சிறை மற்றும் வெளிச் சிறை என்ற இரு பிரிவுகளைக் கொண்ட பாளையங்கோட்டை சிறையில் மொத்தம்சுமார் 1,500 கைதிகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை பாளையங்கோட்டை வெளிச் சிறையிலிருந்து பாண்டி, கிட்டப்பா மற்றும் கண்ணன்ஆகிய மூன்று கைதிகள் தப்பிச் சென்று விட்டனர்.
சிறைக் கதவின் கம்பிகளை வளைத்து வெளியேறிய இந்தக் கைதிகள் சிறை வளாகத்திற்குள்ளேயே உள்ளபாதாளச் சாக்கடை வழியாகத் தப்பியோடி விட்டனர்.
இவர்களில் பாண்டியும் கிட்டப்பாவும் கொலை வழக்கு தொடர்பாக குண்டர் சட்டத்தின் கீழ் கைதானவர்கள்.மற்றொருவனான கண்ணன் ஒரு கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தான்.
இந்தக் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தப்பிச் சென்ற கைதிகளைப் பிடிப்பதற்காகத் தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications