For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி விவகாரம்: ஜெ. செய்வது சரியல்ல- கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள நிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,

திமுக ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் அரசுத் தூதரை கர்நாடகத்துக்கு அனுப்பினோம். மாநிலமுதல்வர் உள்பட அதிகாரிகளுடன் நல்ல முறையில் பேசி தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற்று வந்தோம். இதில்எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை.

ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இது போன்ற முயற்சிகளை எடுக்கவில்லை. காவிரி டெல்டாவில் பயிர்கள்காயும் வரை காத்திருந்திருந்துவிட்டு இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறோம், காவிரி நதி நீர்ஆணையத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் எடுத்துள்ள நிலையையும் அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையையும் வரிக்கு வரி, எழுத்துக்கு எழுத்து ஆமோதிக்கிறேன் என்றார்.

தஞ்சை மாவட்ட திமுக முக்கியத் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான கோ.சி.மணி வெளியிட்டுள்ளஅறிக்கையில், காவிரி நதி நீர் விவகாரம் குறித்து யாருடனும் கலந்து ஆலோசிக்காமல் ஜெயலலிதா தன்னிச்சையாகசெயல்பட்டு விவகாரத்தை மேலும் சிக்கலாக்கி வருகிறார் என்று கூறியுள்ளார்.

கர்நாடம் பொய் சொல்கிறது: ஜெயலலிதா

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X