திராவிடக் கட்சிகளிடமிருந்து மக்கள் விடுதலை கேட்கிறார்கள்: இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
கோவை:
திராவிடக் கட்சிகளின் பிடியில் இருந்து மக்கள் விடுதலையை எதிர்பார்ப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறினார்.
கோயம்புத்தூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
1967ம் ஆண்டு ஆரம்பித்தது திராவிடக் கட்சிகளின் ஆட்சி. ஆனால், தமிழகத்தை அவை வளர்ச்சிப் பாதையில்அழைத்துச் செல்லவில்லை.
67ம் ஆண்டுக்குப் பின் திராவிடக் கட்சிகளில் இருந்த இளைஞர்களை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன். இப்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் சிவாஜிமன்றத்தில் இருந்தவர்கள்.
எனவே, அந்த நன்றியை மறக்காமல் அவருக்கு காங்கிரஸ் சார்பில் ஏதாவது செய்ய வேண்டும் என்றுமுடிவெடுத்திருக்கிறோம். அவருக்கு எங்கள் கட்சி விரைவில் நினைவுச் சின்னம் அமைக்கும் என்றார்இளங்கோவன்.












Click it and Unblock the Notifications