பிரியங்காவுக்கு பெண் குழந்தை
டெல்லி:
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மகளான பிரியங்கா இன்று அதிகாலை பெண் குழந்தை ஒன்றைப்பெற்றெடுத்தார்.
வதேரா என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா. இவர்களுக்கு ஏற்கனவேஒரு ஆண் குழந்தை உள்ளது. இக்குழந்தை கடந்த ஆகஸ்ட் 2000ல் பிறந்தது.
இந்நிலையில் பிரியங்கா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாதக் கர்ப்பிணியாக பிரியங்கா சமீபத்தில் டெல்லியில்உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் பிரியங்காவுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும்நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, நீண்ட காலமாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரியங்கா, தற்போது இரண்டுகுழந்தைகளுக்குத் தாயாகி விட்ட நிலையில் முழு நேர அரசியலில் விரைவில் குதிப்பார் என்று காங்கிரஸ்வட்டாரங்கள் தெரிவித்தன.
அமேதி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவு கேட்டு அங்கு பிரியங்காபிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications