தீவிரவாதிகள் விவகாரம்: முஷாரபுக்கு அமெரிக்கா சூடு
டெல்லி:
இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் நுழையாமல் நிரந்தரமாகக் கட்டுப்படுத்துவேன் என்று நான் அமெரிக்காவுக்குஉறுதிமொழி ஏதும் தரவில்லை என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளதற்குஅமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளைத் தடுப்பதாக எங்களிடம் முஷாரப் உறுதிமொழி தந்தது உண்மை என அமெரிக்காதெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்தில் நியூஸ்வீக் இதழுக்கு முஷாரப் அளித்த பேட்டியில்,
இந்திய காஷ்மீரில் நடப்பது சுதந்திரப் போர். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்துபோராளிகள் தான் அங்கு சென்று சண்டை போட்டு வருகின்றனர். அவர்களை எல்லைத் தாண்டிச் செல்லாமல்தடுக்க அமெரிக்கா வலியுறித்தியது. இதனால் இப்போது அவர்களை தடுத்துள்ளோம். ஆனால், நிரந்தரமாகஅவர்களைத் தடுப்பேன் என்று அமெரிக்காவிடம் எந்த உத்தரவாதமும் தரவில்லை என்று கூறியிருந்தார்.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதிமொழி தந்ததால் தான்பாகிஸ்தானை தாக்காமல் விட்டோம் என்று இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
இந் நிலையில் முஷாரபின் இந்த பேட்டி குறித்து இந்தியாவில் உள்ள தனது தூதரம் மூலமாக அமெரிக்கா விளக்கம்தந்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளாவது:
எல்லையில் பெரும் பதற்றம் நிலவியபோது எங்கள் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ்பாகிஸ்தான் சென்று பர்வேஸ் முஷாரபை சந்தித்தார். ஜூன் 6ம் தேதி நடந்த அந்தச் சந்திப்பின்போது எல்லைதாண்டி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதை நிரந்தரமாகத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அப்போதுமுஷாரப் உறுதிமொழி தந்தார் என்று அமெரிக்கா விளக்கம் தந்துள்ளது.
பாகிஸ்தான் பின் லேடன்:
இந் நிலையில் பின் லேடன் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில் உள்ள பழங்குடியின பகுதிகளில்தான் பதுங்கியிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அந்தக் கும்பலைப் பிடிப்பது தொடர்பாக முஷாரபுடன் ஆலோசனை நடத்த அமெரிக்க ராணுவத்தின் காமாண்டர்ஜெனரல் டாமி பிராங்ஸ் இஸ்லாமாபாத் வந்துள்ளார்.