அமர்நாத் யாத்திரை பாதையில் கண்ணிவெடி: 3 வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ:
அமர்நாத் யாத்திரைப் பாதையில் கண்ணிவெடியில் சிக்கி 3 இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர்.
வரும் ஜூலை 22ம் தேதி முதல் அமர்நாத் புனித யாத்திரை தொடங்குகிறது. இதையடுத்து இந்தப் பாதையைராணுவம் இப்போதிலிருந்தே பாதுகாக்க ஆரம்பித்துவிட்டது.
சந்த்வாரி என்ற இடத்தில் சென்ற ராணுவ வாகனம் இன்று காலை இந்த கண்ணிவெடியில் சிக்கியது. இதில் இந்தவாகனம் மலைப் பள்ளத்தாக்கில் தூக்கி எறிப்பட்டது. இதில் அந்த வாகனத்தில் இருந்த 3 வீரர்களும் உயிரிழந்தனர்.
தீவிரவாதிகள் கிரனைட் தாக்குதல்:
இந் நிலையில் இன்று காலை அனந்த் நாக் மாவட்டத்தில் லால் செளக் என்ற இடத்தில் பொது மக்கள் மீதுதீவிரவாதிகள் கிரனைட்களை வீசித் தாக்கினர்.
இதில் 22 பேர் காயமடைந்தனர். இதில் 2 பேர் பாதுகாப்புப் படையினராவர். இதையடுத்து மக்கள் சிதறி ஓடினர்.காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.
-->












Click it and Unblock the Notifications