Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிகச் சிறப்பாய் நடந்து முடிந்த திருவண்ணாமலை கும்பாபிஷேகம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடந்துமுடிந்தது.

26 ஆண்டுகளுக்குப் பின்னர் இக் கோவிலின் மகாகும்பாபிஷேகம் நடந்துள்ளது. இதற்காக ரூ. 5.5 கோடிசெலவிடப்பட்டு கோவில் புதுப்பிக்கப்பட்டது.

கடந்த 19ம் தேதி யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்று 8ம் கால யாகசாலைப் பூஜைகளுடன் பரிகாரதெய்வங்களுக்கு குடமுழுக்கு நடந்தது.

இன்று ராஜகோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களுக்கு காலை 9.17 மணிக்கு குடமுழுக்கு நடந்தது.

ராஜகோபுரத்துக்கும், மூலவர் கோபுரத்துககும் குடமுழுக்க நடந்த அதே நேரத்தில் திருவண்ணாமலை தீபம்ஏற்றப்படும் மலைச் சிகரத்துக்கும் புண்ணிய நீரால் குடமுழுக்கு செய்யப்பட்டது.

இதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர்.

பின்னர் கோபுர கலசங்களுக்கு பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன.

அப்போது பக்தர்கள் அண்ணாமலையானுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.

ராஜகோபுரத்தின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டபோது கருடன் கோபுரத்தை சுற்றி வந்தது. இது மிக நல்ல சகுனம்என்பதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

சங்கராச்சாரியாருக்கு கொலை மிரட்டல்:

திருவண்ணாமலை கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் காஞ்சி சங்கராச்சாரியாரை கொல்வோம் என மிரட்டல்கடிதம் வந்துள்ளதையடுத்து அவருக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அல்-உம்மா தீவிரவாதி இமாம் அலியின் கூட்டாளிகள் இந்தக் கடிதத்தை காஞ்சி மடத்துக்கு அனுப்பியுள்ளனர்என போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், இதையும் மீறி ஜெயேந்திரரும் விஜேயந்திரரும் இந்த விழாவில் இன்று கலந்து கொண்டுள்ளனர்.அவர்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

998 கூடுதல் பஸ்கள்:

இந்த விழாவையொட்டி தமிழகத்தின பல பகுதிகளில் இருந்தும் 998 சிறப்புப் பேருந்துகளும் சிறப்பு ரயிகளும்இயக்கப்பட்டு வருகின்றன.

நகருக்குள் லாரிகள் உள்ளிட்ட பிற கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 தாற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்ததால் 5,000போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நூற்றுக்கணக்கான ரகசிய போலீசாரும் கூட்டத்தோடு கூட்டமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மோப்ப நாய்களைக் கொண்டு ஆங்காங்கே சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+