மத்திய அமைச்சரவையில் பா.ம.க.: வாஜ்பாய்- ராமதாஸ் நாளை சந்திப்பு
சென்னை:
காவிரி விவகாரம் தொடர்பாகவும், மத்திய அமைச்சரவையில் தனது எம்.பிக்களை சேர்ப்பது குறித்தும் விவாதிக்கநாளை பிரதமர் வாஜ்பாயை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சந்தித்துப் பேசுகிறார்.
இதற்காக ராமதாஸ் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று பாதுகாப்பு அமைச்சரும் தேசிய ஜனநாயகக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான ஜார்ஜ் பெர்னாண்டசை ராமதாஸ் சந்தித்துப் பேசுகிறார்.
தனது கட்சிக்கு கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் பதவியை ராமதாஸ் கோருவார் என்று தெரிகிறது. கடந்தமுறை அந்தக் கட்சிக்கு இணையமைச்சர் அந்தஸ்திலான இரு பதவிகள் தரப்பட்டன. இப்போது ஒரு கேபினட்அமைச்சர் பதவியையாவது ராமதாஸ் கோருகிறார்.
அதே போல பிரதமரை சந்திக்கும்போது காவிரியில் நீர் விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனராமதாஸ் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.க.- திமுககூட்டணியில் இருந்து விலகினார் ராமதாஸ். பின்னர் அவரே போய் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications