எஸ்.எஸ்.எல்.சி. உடனடி மறு தேர்வு ஜூலை 3ல் தொடக்கம்
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஓ.எஸ்.எல்.சியில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகளுக்கு வரும்ஜூலை 3ம் தேதி முதல் உடனடி மறு தேர்வு நடக்கவுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் பழனிவேலு தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்கூறியுள்ளதாவது:
இந்த உடனடி மறு தேர்வு ஜூலை 8ம் தேதி வரை நடக்கிறது.
மறு தேர்வுக்காக விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட கல்வி மையங்களிலிருந்து நாளை(திங்கள்கிழமை) முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்.
சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளின் மதிப்பெண் சான்றிதழின் ஜெராக்ஸ் பிரதியைச் சமர்ப்பித்து ஹால்டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளலாம். ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கு மட்டுமேஹால் டிக்கெட் வழங்கப்படும்.
செவ்வாய்க்கிழமை வரை ஹால் டிக்கெட் வழங்கப்படவுள்ளது என்று அவ்வறிக்கையில் பழனிவேலு கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications