பூட்டியிருந்த வீட்டை உடைத்து மாபெரும் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றவரின் வீட்டில் பெரும் கொள்ளை நடந்துள்ளது.
சென்னையில் தான் இந்தச் சம்பவமும் நடந்தது. கே.கே. நகரில் வசித்து வரும் சண்முகம் என்ற தொழிலதிபர் தனதுகுடும்பத்தினருடன் பெங்களூர் சென்றுவிட்டார்.
கடந்த சில நாட்ககளாக இந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. இந் நிலையில் இன்று காலை இந்த வீட்டின் பூட்டுஉடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அனைத்து அறைகளையும் சூறையாடியுள்ளனர்.
பீரோக்கள், அலமாரிகள் உடைக்கப்பட்டு நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள. வீட்டில் சாவிக்கொத்துகளும் கிடந்தன.
வீட்டில் எவ்வளவு நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டன என்று தெரியவில்லை. வீட்டின் உரிமையாளர்வந்தால் தான் எவ்வளவு நகைகள் பறிபோயின என்று தெரியவரும்.
இந்தப் பகுதியில் கடந்த 2 மாதங்களில் நடந்துள்ள 6வது மிகப் பெரிய கொள்ளைச் சம்பவம் இது.












Click it and Unblock the Notifications