கொலையான தமாகா தொண்டர் உடலை பெற மறுப்பு: பாண்டியில் பதற்றம் தொடர்கிறது
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏவின் ஆதரவாளர்களால் நடு ரோட்டில் கொலை செய்யப்பட்ட த.மா.கா.தொண்டரின் உடலைப் பெற அக் கட்சியினர் மறுத்துவிட்டனர். இதனால் அந்த உடல் மருத்துவமனையிலேயேவைக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ. ராஜவேலுவையும் இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்காதவரை உடலைப் பெறமாட்டோம் என கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும்கூறிவிட்டனர்.
ஆனால், பாண்டிச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் சட்டமன்ற தலைமைக் கொறடாவாக ராஜவேலு உள்ளார்.இதனால் அவர் மீது அரசு வழக்குத் தொடருமா என்பது சந்தேகம் தான்.
இந் நிலையில் நேற்றைய தாக்குதலில் பலத்த காயமடைந்த மேலும் 2 காங்கிரஸ் தொண்டர்களில் சுப்பிரமணியம்என்பவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
பாண்டிச்சேரி பாகூர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜவேலுவின் ஆதரவாளர்களுக்கும் முன்னாள்அமைச்சரும் த.மா.கா பிரமுகருமான கந்தசாமியின் ஆட்களுக்கும் இடையே நேற்று பயங்கர கோஷ்டி மோதல்நடந்தது.
கந்தசாமியின் ஆதராவளர்களை ராஜவேலுவின் ஆட்கள் தாக்கினர். இதில் த.மா.கா. தொண்டரான அமிர்தலிங்கம்என்பவர் நடு ரோட்டில் குத்திக் கொல்லப்பட்டார். மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர்.
எம்.எல்.ஏ. ராஜவேலுவைக் கைது செய்தால் தான் அமிர்தலிங்கத்தின் உடலைப் பெறுவோம் என த.மா.காவினர்கூறிவிட்டனர். இதனால் அந்த உடல் மருத்துவமனையிலேயே கிடத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்தக் கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ.ராஜவேலு மீது எந்த விதமான வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் இருந்தே இரு தரப்பினருக்கும் இடையே பகை இருந்து வந்தது. ராஜவேலுவிடம் கந்தசாமிதோற்றார்.
இந் நிலையில் ராஜவேலுவின் சதோதரரின் மகன் கந்தசாமியின் உறவினரின் மகளைக் காதலித்து வந்துள்ளார். சிலதினங்களுக்கு முன் இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் எழுந்தது. ராஜவேலுவின் ஆட்கள் கந்தசாமியின்ஆட்களை தாக்கினர். இது தொடர்பாக கந்தசாமியின் ஆட்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அவர்கள் காவல் நிலையத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது அவர்களை ராஜவேலுவின் ஆட்கள்வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் கந்தசாமியின் ஆதரவாளரான அமிர்தலிங்கம்கொல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications