இமாம் அலி தப்பிய வழக்கில் கைதான 23 பேருக்கு காவல் நீட்டிப்பு
சென்னை:
அல் உம்மா தீவிரவாதி இமாம் அலி தப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 23 பேருடைய நீதிமன்றக் காவல்நீட்டிக்கப்பட்டுள்ளது.
அல் உம்மா தீவிரவாதி இமாம் அலி தப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 23 பேருடைய நீதிமன்றக் காவல்நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கடந்த மார்ச் 7ம் தேதி போலீஸ் பிடியிலிருந்து இமாம் அலியும், ஹைதர்அலியும் தப்பினர்.
இவர்களில் ஹைதர் அலி மட்டும் மீண்டும் அடுத்த சில நாட்களிலேயே பிடிபட்டார். இமாம் அலி இன்னும்தலைமறைவாகவே உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றக்காவலில் உள்ளனர்.
இந்நிலையில் இவர்களது காவல் தற்போது ஜூலை 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் கோர்ட்டில் நேற்று(செவ்வாய்க்கிழமை) ஆஜர்படுத்தப்பட்ட இவர்களது காவலை மேலும் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications