For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள வக்கீல் கொலை வழக்கு: 7 கர்நாடக போலீஸார் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கர்நாடக மாநிலம் பெங்களூருக்குச் சென்ற கேரள வக்கீல் ஒருவர் மர்மமான முறையில் சேலம் அருகே இறந்துகிடந்த வழக்கில் கீழ் கோர்ட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கர்நாடக துணை போலீஸ் கமிஷனர் உள்பட 7 பேரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரளாவைச் சேர்ந்தவர் எம்.ஏ. ரஷீத். இவர் ஒரு வழக்கறிஞர். கடந்த 1987ம் ஆண்டு வழக்கு தொடர்பாகபெங்களூர் சென்றிருந்த ரஷீத் அதன் பின்னர் திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் அவரது இறந்த உடல் சில நாட்களுக்குப் பிறகு சேலம் அருகே ஒரு ரயில் தண்டவாளத்தில் கிடந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த சி.பி.ஐ. விசாரணையின் தொடர்ச்சியாக கர்நாடக அமைச்சர்ஜாலப்பா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகத்தையே உலுக்கியது இந்த கொலை வழக்கு. இதுதொடர்பாக சேலம்

முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்தது. விசாரணையின் இறுதியில் அமைச்சர் ஜாலப்பா உள்ளிட்ட 8பேர் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் 7 போலீஸாருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தண்டனையை எதிர்த்து பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் நாராயணன் உள்ளிட்ட 7 பேர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் தினகர் மற்றும் மலை சுப்ரமணியம்

ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளித்தனர்.

கொலை சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இருந்த தொடர்பு சரியாக நிரூபிக்கப்படவில்லை என்பதால்அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள் என்று தீர்ப்பளித்தனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X