குரு பெயர்ச்சி: சென்னையில் சிறப்பு யாகம்
சென்னை:
குருப் பெயர்ச்சியை முன்னிட்டு சென்னையில் இன்று சிறப்பு யாகம் நடைபெற்றது.
மிதுன ராசியில் இதுவரை சஞ்சரித்து வந்த குரு பகவான் கடந்த ஜூன் 29ம் தேதி கடக ராசியில் பிரவேசித்தார்.
இந்த குருப் பெயர்ச்சியைத் தொடர்ந்து சில ராசிகளைச் சேர்ந்தவர்களுக்குப் பாதிப்புகள் ஏற்படலாம் என்று தெரியவந்தது.
இதையடுத்து இந்தப் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் பரிகாரம் செய்வதற்காக சென்னையில் சிறப்பு யாகம் செய்யஏற்பாடு செய்யப்பட்டது.
பிரபல ஜோதிடர் முருகு ராஜேந்திரன் இந்தச் சிறப்பு யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். சென்னை வடபழனியில்இந்த யாகம் இன்று காலை நடந்தது.
யாகத்தின் போது 1,008 கலசங்களில் ஹோமப் பூஜைகள் நடைபெற்றன.
குருப் பெயர்ச்சி நடைபெற்ற ஜூன் 29ம் தேதியன்று திருவாரூர் மாவட்டத்தில் ஆலங்குடியிலும், சிவகங்கைமாவட்டத்தில் பட்டமங்கலத்திலும் உள்ள குரு பகவான் ஆலயங்களில் இதே போல் சிறப்பு யாகங்கள் நடந்தனஎன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications