For Daily Alerts
Just In
ஸ்டாலினுக்காக திருச்சியில் பொதுக்கூட்டம்: கருணாநிதி பங்கேற்பு
திருச்சி:
சென்னை மேயராக இருந்த ஸ்டாலினை அப்பதவியிலிருந்து அதிமுக அரசு அகற்றியதைக் கண்டித்து திருச்சியில்திமுக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் இன்று சிறப்புரையாற்றுகிறார் திமுக தலைவர் கருணாநிதி.
ஸ்டாலினின் பதவிப் பறிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.
அதன்படி இன்று திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
திருச்சி ஒத்தக்கடை பகுதியில் இன்று மாலை நடைபெறும் இந்தக் கண்டனப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டுசிறப்புரையாற்றுகிறார் கருணாநிதி.
இந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கருணாநதி நேற்று சென்னையிலிருந்து திருச்சி சென்றார்.
Story first published: Thursday, July 4, 2002, 5:30 [IST]