For Daily Alerts
Just In
"காதல் வாழ்க" கோஷத்துடன் வாலிபர் தற்கொலை
சென்னை:
தான் ஒரு தலையாகக் காதலித்து வந்த ஒரு பெண் தனது காதலை ஏற்காத காரணத்தால், தன் காதலைநிரூபிப்பதற்காக அந்தப் பெண் தங்கியிருந்த விடுதி முன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார் சென்னைவாலிபர்.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் துவாரகாநாத். இவர் தி. நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்தஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
ஆனால் துவாகரகாநாத் குடிப்பழக்கம் கொண்டவர் என்பதால் அவரைக் காதலிக்க அந்தப் பெண் மறுத்து விட்டார்.
இதனால் வெறுப்படைந்த துவாரகாநாத் தனது காதல் உண்மையானது என்றும் அதை நிரூபித்துக் காட்டுகிறேன்என்றும் அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தி. நகரில் உள்ள அந்த விடுதிக்கு வந்தார் துவாரகாநாத். "காதல் வாழ்க, காதல் வாழ்க" என்றுகோஷமிட்டபடி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மாம்பலம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
Comments
Story first published: Thursday, July 4, 2002, 5:30 [IST]