"ஜெ. நடத்தும் இலவச திருமணம்: 120 மதுரை ஜோடிகள் ரெடி"
மதுரை:
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னை அருகே உள்ள திருவேற்காடு கோவிலில் வரும் 14ம் தேதி 1008ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெறவுள்ளது.
திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் 1008 ஜோடிகளுக்கு நடக்கவுள்ள இந்த இலவச திருமணங்களைஜெயலலிதா தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். மாவட்டம் தோறும் ஏழை ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டுஇலவசமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 120 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மதுரைமீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் மூலம் இந்த ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
120 ஜோடிகள், அவர்களது உறவினர்கள், கோவில் நிர்வாகிகள் என மொத்தம் 1,200 பேர் மதுரையிலிருந்துசென்னை வரவுள்ளனர். இதற்காக 26 தனி பஸ்கள் அமர்த்தப்பட்டுள்ளன.
மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகேயிருந்து வரும் 13ம் தேதி காலை இந்த பஸ்கள்சென்னை கிளம்புகின்றன. மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையாளரான பாஸ்கரன் தலைமையில் இவர்கள்சென்னைக்கு வருகிறார்கள்.
சென்னையில் தங்குமிடம், சாப்பாடு ஆகியவை இவர்களுக்கு இலவசமாக தரப்படுகிறது. திருமாங்கல்யம்,புத்தாடைகள், சீர் வரிசை ஆகியவற்றை ஜெயலலிதா வழங்குகிறார்.
திருமணம் முடிந்த பிறகு இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்கள். அதன் பிறகு சந்தோஷமாக அவர்கள் மதுரை திரும்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications