"மத்திய அமைச்சராக திருநாவுக்கரசர் நாளை பொறுப்பேற்பு
சென்னை:
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ள எஸ். திருநாவுக்கரசர் நாளை(வெள்ளிக்கிழமை) தனது அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். அதன் பிறகு சனிக்கிழமை அவர் தமிழகம்வருகிறார்.
சமீபத்தில் தனது எம்.ஜி.ஆர். கட்சியோடு பாரதீய ஜனதாக் கட்சியில் ஐக்கியமானவர் திருநாவுக்கரசர்.
கடந்த திங்கள்கிழமை நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது மத்திய அமைச்சராகப் பதவியேற்றதிருநாவுக்கரசர் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அவர் தனது அமைச்சர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
அதற்கு அடுத்த நாளே சென்னை வரும் திருநாவுக்கரசர், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சமாதிகளுக்குச் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
அதன் பின்னர் தனது தொகுதியான புதுக்கோட்டைக்கு செல்கிறார். அங்கு பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தன்னைஎம்.பியாகத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி கூறுகிறார்.












Click it and Unblock the Notifications