மகளிர் நீதிமன்றங்கள் இன்று துவக்கம் .. பெண் நீதிபதிகள் நியமனம்
சென்னை:
தமிழக அரசு 2 மகளிர் நீதிமன்றங்களை அமைத்துள்ளது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அமையும் அந்தநீதிமன்றங்களுக்கான நீதிபதிகளையும் அரசு அறிவித்துள்ளது.
பெண்கள் சம்பந்தமான வழக்குகளை விரைவாக விசாரித்து நீதி வழங்குவதற்கு வசதியாக பெண்கள் நீதிமன்றங்கள்அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மகளிர் நீதிமன்றங்கள் இன்று துவக்கப்படவுள்ளன. அந்தநீதிமன்றங்களுக்கான நீதிபதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி 2வது கூடுதல் மாவட்ட நீதிபதியாக உள்ள விமலா, சென்னை மகளிர் நீதிமன்றத்தின் நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் சேலம் குடும்ப நீதிமன்ற நீதிபதியான கலாவதி, கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார்.இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இரு கோர்ட்டுகளையும் சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி துவக்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications