இன்று மதிமுக நிர்வாகிகள் அவசரக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வைகோ மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைஎடுப்பது குறித்து மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலைநடக்கிறது.
கட்சியின் அவைத் தலைவரான எல். கணேசன் தலைமையில் இந்தக் கூட்டம் நடக்கிறது. மாலை 4 மணிக்குஎழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் இக்கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.
வைகோ விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து இக்கூட்டத்தில்விவாதிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications