வைகோவை கைது செய்ய தனிப் படைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
12ம் தேதி இந்தியா திரும்பும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைக் கைது செய்ய தனி போலீஸ் படைகள்அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆழ்ந்த அமைதி காத்து வருகிறது. கடைசி நேரத்தில் பிரதமர் அலுவலகத்தில்இருந்தோ அல்லது உள்துறை அமைச்சகத்தில் இருந்தோ நெருக்குதல் வராதபட்சத்தில் வைகோ கைதுசெய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
அவர் இந்தியாவின் எந்த நகரில் வந்து இறங்கினாலும் அவரை அங்கு வைத்தே கைது செய்ய தனிப் போலீஸ்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வைகோவின் எந்த விமானத்தில் வருகிறார், எங்கு வந்து இறங்குகிறார் போன்ற விசாரணைகளை மாநில உளவுப்பிரிவு போலீசார் ஆரம்பித்துவிட்டனர். இதனால், அவர் வரும் விமானம் குறித்த தகவல் கிடைத்ததும் இந்தப் படைஅங்கு விரையும், வைகோவைக் கைது செய்யும்.












Click it and Unblock the Notifications