காவிரி விவகாரம்: சென்னையில் ரயில் மறியலுக்கு முயற்சித்த விவசாயிகள் கைது
சென்னை:
காவிரியில் நீர் திறந்து விட கர்நாடக அரசை பிரதமர் வாஜ்பாய் வற்புறுத்த வேண்டும் என்று கோரி சென்னையில்ரயில் மறியல் செய்வதற்காகத் திரண்டு வந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளை இன்று போலீசார் கைது செய்தனர்.
காவிரியில் 3 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கு வாஜ்பாய்உத்தரவிட்டார். ஆனால் நீரைத் திறந்துவிட முடியாது என்று ஏற்கனவே கிருஷ்ணா கூறிவிட்டார். நேற்று கர்நாடகஅமைச்சரவையிலும் இதே முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக அரசைத் தொடர்ந்து வாஜ்பாய் வற்புறுத்த வேண்டும் என்று கோரி சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்தது.
இதையடுத்து எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இன்று காலை ரயில் மறியல் செய்வதற்காக நூற்றுக்கணக்கான விவசாயிகள் அங்கு வந்தனர்.
ஆனால் அவர்களை மறியல் செய்ய விடாமல் தடுத்த போலீசார், வந்திருந்த அனைத்து விவசாயிகளையும் கைதுசெய்து வேனில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications