ஊனமுற்றவர்களுக்கு ஒரே மாதிரி அடையாள அட்டை: தமிழக அரசு முடிவு
மதுரை:
அனைத்து வகையான உடல் ஊனமுற்றவர்களுக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை விரைவில்வழங்கப்படும் என்று உடல் ஊனமுற்றோர் நலத்துறை இணை இயக்குநர் சண்முகம் தெரிவித்தார்.
மதுரையில் ஒரு கருத்தரங்குக் கூட்டத்தில் சண்முகம் பேசியதாவது:
உடல் ஊனமுற்றவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.
உடல் ஊனமுற்றவர்களில் பல பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த பிரிவுக்கேற்ப வெவ்வேறுவகையான அடையாள அட்டைகள் தான் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை தான் வழங்க வேண்டும் என்று மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விரைவில் உடல் ஊனமுற்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டைவழங்குவதற்கான பணிகள் ரூ.10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பான ஒரு அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அனுமதி கிடைத்ததும்அடுத்தகட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதனால் சுமார் 2 லட்சம் உடல் ஊனமுற்றவர்கள் பயன் பெறுவார்கள். நாடு முழுவதும் அவர்கள் இதைப்பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் சண்முகம்.












Click it and Unblock the Notifications