இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்க தி.க. முடிவு

Subscribe to Oneindia Tamil

சேலம்:

பெரியார் நலப் பயிற்சி மையங்களைத் துவக்கி அனைத்து இளைஞர்களுக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கதிராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது.

சேலத்தில் நடந்த தி.க. இளைஞரணியின் மாநில மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த "துர்வாகினி" என்ற மகளிர் அமைப்பைச் சேர்ந்த 5,000 பேருக்குவாள் வீச்சு, துப்பாக்கி சுடுதல், திரிசூல சண்டை ஆகியவற்றுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல்திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படும் என்று அந்தத் தீர்மானம்கூறுகிறது.

அரசின் அனுமதி பெற்றே இந்தப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் இளைஞர்களின் தற்காப்புக்காகவே இந்தப்பயிற்சி, வன்முறைக்காக அல்ல என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

தனியார் துறைகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்திநாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவது, "மாணவர் கல்வி உதவி நிதிய"த்தை ஏற்படுத்தி குறைந்தவட்டியில் கல்விக் கடன் அளிக்க அரசை வலியுறுத்துவது, கோவில்களில் அர்ச்சனை செய்வதற்கு அனைத்துஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை அரசு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட வேறு பல தீர்மானங்களும்இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+