டெல்லிக்கு சைக்கிள் பயணம் செய்யும் மதுரை மாணவர்கள்
பெங்களூர்:
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மதுரையில் இருந்து டெல்லிக்கு சைக்கிள்களில் பயணம் செய்யும் 3 மாணவர்கள்பெங்களூர் வந்தனர்.
5 பேராகக் கிளம்பிய இந்தக் குழுவைச் சேர்ந்த 2 பேர் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்ததால் பயணத்தைக்கைவிட்டுவிட்டனர்.
மகாத்மா காந்தி சர்வோதய இயக்கத்தின் சார்பில் மதுரையைச் சேர்ந்த தங்கப்பாணடி, மதுரை வீரன், மாரியப்பன்,கதிர்வேல், சுரேஷ் ஆகியோர் கடந்த ஜூன் 15ம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டனர்.
இவர்களில் கதிர்வேல், சுரேஷ் இருவரும் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தனர். இதனால், இவர்களால்பயணத்தைத் தொடர முடியவில்லை.
ஆனால், மற்ற மூவரும் தொடர்ந்து பயணம் மேற்கொண்டனர். திருச்சி, சென்னை வழியாக இவர்கள் நேற்று முன்தினம் பெங்களூர் சென்றடைந்தனர். பின்னர் நேற்று டெல்லிக்குப் புறப்பட்டனர். புனே, மும்பை, குஜராத் மாநிலம்வழியாக இவர்கள் டெல்லி செல்கின்றனர்.