நெய்வேலி சுரங்கத்தில் பெரும் தீ: ரூ. 1 கோடி சேதம்-- 10 பேர் உயிர் தப்பினர்

Subscribe to Oneindia Tamil

நெய்வேலி:

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் இன்று மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 1 கோடி மதிப்புள்ளகருவிகள் எரிந்து போயின. தீயில் இருந்து 10 தொழில்நுட்ப வல்லுனர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நிலக்கரியை வெட்டி எடுக்கும் ஸ்பிரட்டர்-421 என்ற மாபெரும் எந்திரத்தில் வெல்டிங் பணி நடந்துகொண்டிருந்தது. அப்போது அதிலிருந்து தெறித்த தீப்பொறியினால் எந்திரத்தில் தீ பற்றிக் கொண்டது.

அப்போது அந்த எந்திரத்தின் மீது நின்று பணியாற்றிக் கொண்டிருந்த 10 என்ஜினியர்களும் உடனடியாகஅங்கிருந்து தரையில் குதித்தனர். 30 அடி உயரத்தில் இருந்து அவர்கள் குதித்த இடத்தில் மணல்கொட்டப்பட்டிருந்தால் அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

அவர்கள் கீழே குதித்த சில நிமிடங்களில் எந்திரம் முழுவதும் தீ பரவியது. பக்கத்தில் இருந்த மின்சார கேவிள்கள்,கண்ட்ரோல் போர்டுகள் என மேலும் பல கருவிகளும் முழுமையாக சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 1கோடியாகும்.

இந்த இடத்தைப் பார்வையிட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+