முன்னாள் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி கைது
ஈரோடு:
மதிமுகவின் முன்னாள் எம்.பியும் அக்கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளருமான கணேச மூர்த்தி இன்றுஅதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல்நபர் இவர் தான்.
கடந்த ஜூன் 29ம் தேதி திருமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காகமதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது பொடா சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இவர்களில் வைகோவைத் தவிர மற்ற 8 பேரையும் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை திருமங்கலம்குற்றவியல் நீதிமன்றம் நேற்று இரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுரையிலிருந்து ஈரோட்டுக்கு இரவோடு இரவாகக் கிளம்பிய தனிப் படைப் போலீசார், அங்குள்ளகணேச மூர்த்தியின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பிக் கைது செய்தனர்.
இந்தப் படை உசிலம்பட்டி காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் ஈரோடு சென்றது.
எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்புடன் இருந்த கணேசமூர்த்தி கைதுவாரண்ட்டை போலீசாரிடம் இருந்து கேட்டுப் படித்துப் பார்த்த பின்னர் உடன் வர ஒப்புக் கொண்டார். அந்தஅதிகாலையிலும் அவரது வீட்டில் பெரும் கூட்டம் கூடி விட்டது. அவர் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில்ஏற்றப்பட்ட போது அவரது வீட்டினரும், பொது மக்களும் கண்கலங்கினர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய கணேசமூர்த்தி, இலங்கையில் ஒரு இனம் தனது வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால், நமது தமிழக அரசு கைது செய்திருக்கிறது. இதைசட்டப்படி சந்திப்போம் என்றார்.
கைது செய்யப்பட்ட உடன் கணேச மூர்த்தி மதுரை திருமங்கலம் கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications