For Daily Alerts
Just In
ஏர்-இந்தியா விமானங்களில் பயணிகளுக்கு மசாஜ்
திருவனந்தபுரம்:
நீண்டதூரம் செல்லும் ஏர்-இந்தியா விமானங்களில் பயணிகளுக்கு ஆயுர்வேத மசாஜ் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்காக கேரள அரசின் உதவியை ஏர்-இந்திய நிறுவனம் நாடியுள்ளது. கேரளத்தின் ஆயுர்வேத நிபுணர்களைக் கொண்டுவிமானங்களில் பயணிகளுக்கு இந்த மசாஜ் செய்யப்படும்.
கேரள அரசும் மத்திய விமானத்துறையும் இணைந்து இந்தத் திட்டத்தை அமலாக்கவுள்ளன. இது குறித்து விவாதிக்கவிமானத்துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசைன் நாளை திருவனந்தபுரம் வருகிறார்.
இதற்காக விமானத்தின் ஒரு பகுதியில் தனி பிரிவை உருவாக்கவும், இதற்கு தனி கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, July 10, 2002, 5:30 [IST]