பெரம்பலூர் வங்கியில் கொள்ளை முயற்சி: அபாய மணி ஒலித்ததால் ரூ.3 கோடி தப்பியது

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்த போது அங்குள்ளஅபாய மணி ஒலி எழுப்பியதால் சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் தப்பின.

பெரம்பலூர் அருகே பொம்மனாடி என்ற கிராமத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி உள்ளது.

இங்கு நேற்று முன் தினம் இரவு கொள்ளையர்கள் நுழைந்தனர். அப்போது அங்குள்ள அபாய மணி பயங்கரச்சத்தத்துடன் ஒலிக்கத் தொடங்கியது.

இதையடுத்து பொதுமக்களும் போலீசாரும் சுதாரித்துக் கொண்டு வங்கியை நோக்கி ஓடி வந்தனர்.

இதைக் கண்ட கொள்ளைக் கும்பல் தங்களுடைய கொள்ளை முயற்சியைக் கைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனால் வங்கியிலிருந்த இரண்டரை கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் ஆகியவை கொள்ளைமுயற்சியிலிருந்து தப்பின.

வீடுகளில் தொடர் கொள்ளை:

பெரம்பலூரில் அதே இரவில் அடுத்தடுத்துள்ள 3 வீடுகளில் புகுந்து கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தைக்கொள்ளையடித்துச் சென்றனர்.

பெரம்பலூரில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வரும் கண்ணன் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்அங்கிருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.35,000 பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

பின்னர் அருகிலிருந்த வேறு இரண்டு வீடுகளிலும் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து 15 பவுன் நகைகளைக்கொள்ளையடித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

தகவலறிந்து மோப்ப நாயுடன் விரைந்து வந்த போலீசார் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களைச் சேகரித்துவிசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இரவு நேரங்களில் எப்போதும் போலீசார் ரோந்து செல்வதுவழக்கம். அந்த நிலையிலும் இந்தக் கொள்ளைகள் நடந்திருப்பது அவ்வூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற கும்பல் தான் இந்தக் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்றசந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+