காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்து விட உத்தரவிடவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

காவிரியில் நீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வந்ததையடுத்து தமிழகத்தின் காவிரி டெல்டாவிவசாயிகள் இந்த ஆண்டு மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து காவிரி நதி நீர் ஆணையத்தைப் புறக்கணிக்கப் போவதாகவும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்வழக்கு தொடரப் போவதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் கூறியிருந்தார்.

அதன்படி இன்று தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கு தொடர்பான மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம் ஆண்டு தோறும் உரிய முறையில் 205 டி.எம்.சி நீரைத்தமிழகத்திற்குத் திறந்து விட உத்தரவிட வேண்டும்.

இந்த ஆணையத்தை மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்கவேண்டும்.

காவிரியில் தமிழகத்திற்குத் திறந்து விடப்படும் நீரின் அளவைத் தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடவேண்டும்.

இவற்றைத் தவிர கர்நாடகத்தில் காவிரி நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள அணைகள் குறித்து சிறப்பு நிபுணர்கள்குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+