விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது போலீஸ் தாக்குதல்
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் வைகோ கைது செய்யப்படுவதை படம் எடுக்க முயன்ற பத்திரிக்கை புகைப்படக்காரக்கள் மீது போலீசார்வழக்கம்போல் தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒரு போட்டோகிராபர் காயமடைந்தார். கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையிலும் சில மதிமுகவினர் விமான நிலையத்தில்நுழைந்துவிட்டனர். அவர்களை போலீசார் தாக்கி வேன்களில் அள்ளிப் போட்டனர்.
இதையும் மீறி பலர் வைகோ விமான நிலைய வளாகத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கு வந்துவிட்டனர். அவர்கள் வைகோவைப்பார்த்து அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.
அவர்களிடையே பேசிய வைகோ, போராட்டம் என்ற பெயரில் பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது. சாலை மறியல் செய்துயாருக்கும் இடைஞ்சல் தரக் கூடாது. மிக அமைதியான வகையில் போராடுங்கள் என்றார்.
இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும் என நிருபர்களிடம கூறிய வைகோவை போலீசார் வேனில் ஏற்றினர். பல போலீஸ்ஜீப்களும் முன் செல்ல போலீஸ் வேன்கள் பின் தொடர அவர் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் மதுரையை அடைய நாளை காலை 3 மணிக்கு மேல் ஆகிவிடும். அங்கு நீதிபதியில் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் மதுரைமத்திய சிறையில் அடைக்கப்படுவார்.
வைகோ கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதைப் படம் எடுக்க முயன்ற பத்திரிக்கை புகைப்பட நிருபர்கள் மீது போலீசார்பலப்பிரயோகம் செய்தனர். இதனால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது போலீஸ்காரர் தாக்கியதில் ஒரு புகைப்பட நிருபர்காயமடைந்தார்.
எதிர்க் கட்சியினரின் போராட்டங்களைப் படம் எடுக்கும்போதும், எதிர்க் கட்சியினர் கைது செய்யப்படுவதை படம் எடுக்கும்போதும்பத்திரிக்கையாளர்களை தாக்குவதை தமிழக போலீசார் ஒரு ஹாபியாக வைத்துக் கொண்டுள்ளனர்.
போலீசாரின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து சென்னை விமான நிலைய வளாகத்திலேயே பத்திரிக்கையாளர்கள் தர்ணா போராட்டம்நடத்தினர்.