அடுத்தது என்ன?
மதுரை:
சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பபட்டு போலீஸ் வேனில் மதுரை கொண்டு செல்லப்படும் மதிமுக பொதுச் செயலாளர்வைகோ இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதற்கான சிறப்பு அனுமதியை திருமங்கலம் நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் பொறுப்பு வகிக்கும் வனிதாவிடம் போலீசார் கோரியுள்ளனர்.
இந்த நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் வெங்கடாஜலபதி 3 நாட்கள் விடுமுறையில் சென்றுவிட்டார். இவர் முதலில் வைகோவுக்கு எதிராகவாராண்ட் பிறப்பிக்க மறுத்தார். பின்னர் தான் போலீசாரின் தொடர் வேண்டுகோளால் வாராண்ட் பிறப்பித்தார்.
இவர் விடுமுறையில் சென்றுவிட்டதால் நீதிபதி வனிதா தான் அந்தப் பொறுப்பில் உள்ளார். அவர் முன்பாக நாளை அதிகாலை வைகோஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.
வைகோவை ஏற்றிக் கொண்டு மாலை 5 மணியளவில் புறப்பட்ட போலீஸ் வேன் மதுரையை அடைய சுமார் 10 மணி நேரமாகும். இந்தநெடும் பயணத்துக்குப் பின் நாளை அதிகாலை 3 மணியளவில் தான் மதுரையை இந்த வேன் அடையும்.
மதுரை திருமங்கலம் சென்றவுடன் நீதிபதியின் வீட்டில் வைத்தோ அல்லது நீதிமன்றத்தில் வைத்தோ வைகோவை ஆஜர்படுத்திவிட்டுஅவரை உடனடியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கவுள்ளனர்.
இதற்காக மதுரை மத்திய சிறைச்சாலையில் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகங்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
வைகோவுக்கு முன்பாகக் கைதான 8 பேரில் 6 பேரை மதுரை சிறையில் இருந்து பிற இடங்களுக்கு அரசு மாற்றிவிட்டது. இதனால் மதுரைசிறையில் இருக்கும் வைகோவுடன் 2 மதிமுகவினர் தான் இருப்பர். இவர்களும் தனித்தனியே அடைக்கப்படலாம் என்று தெரிகிறது.
வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான பொடா வழக்கு விசாரணைக்காக மதுரையிலேயே ஒரு தனி நீதிமன்றத்தையும் அமைக்க தமிழக அரசுதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
சிகாக்கோவில் இருந்து 12 மணி நேர விமானம் பயணம் செய்துவிட்டு, நள்ளிரவில் மும்பை வந்த அவர், சில மணி தூக்கத்துக்குப் பின்மும்பை விமான நிலையம் வந்துவிட்டார். மாலையில் சென்னை வந்த அவர் உடனடியாக போலீஸ் வேனில் மதுரை அழைத்துச்செல்லப்பட்டார். இதனால், உடல்ரீதியில் அவர் மிகவும் சோர்ந்துவிடக் கூடும்.
திருமங்கலம் காவல் நிலையத்தில் வைகோ மீது ஏற்கனவே எப்.ஐ.ஆர். தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications