ஜெயலலிதாவின் சிறப்புச் செயலாளர் மாற்றம்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்புச் செயலாளரான கே. அருள்மொழி மாற்றப்பட்டுள்ளார்.
அருள்மொழிக்குப் பதிலாக நகராட்சி நிர்வாகத்துறை ஆணையாளராக இருந்த வி.கே. ஜெயக்கொடிஜெயலலிதாவின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த (பயிற்சி) துறையின் செயலாளராக அருள்மொழி மாற்றப்பட்டுள்ளார்.
இதே போல் வேறு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊனமுற்றோர் நலத்துறை ஆணையரான எஸ். மச்சேந்திரநாதன் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சிறப்புச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
உயர்கல்வித்துறை செயலாளரான மோகன் வர்கீஸ் சுங்கத் ஊனமுற்றோர் நலத்துறை ஆணையாளராகமாற்றப்பட்டுள்ளார்.
ஐ.சி.டி.எஸ். திட்டம்-3ன் திட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ள அனுராதா காடி ராஜீவன் ஆதி திராவிடர் நலத்துறையின் ஆணையாளராக மாற்றப்பட்டுள்ளார்.
பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த (பயிற்சி) துறை செயலாளரான ஆர். ஸ்ரீராம் உயர் கல்வித்துறையின்செயலாளராகியுள்ளார்.
தொழில்துறையின் கூடுதல் செயலாளரான ஸ்வரன் சிங் நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநராகநியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான குத்சியா காந்தி கருவூலங்கள் மற்றும்கணக்குத் துறையின் சிறப்பு ஆணையாளராக மாற்றப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியை வகித்து வரும் ஜி.ஏ. ராஜ்குமார் ஊரக வளர்ச்சித் துறையின் சிறப்புச் செயலாளராகியுள்ளார்.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்தின் செயலாளரான சி.கே. கரியாலி மகளிர் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர்மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (திங்கள்கிழமை) பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசு உத்தரவில் இந்த இடமாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications