துணை ஜனாதிபதியாகிறார் பைரோன்சிங் செகாவத்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பைரோன் சிங் செகாவத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்தவர். வரும் வியாழக்கிழமை இவர்தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மனு தாக்கல் செய்கிறார்.
இவரை துணை ஜனாதிபதியாக்குவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நாளை பேச்சு நடத்தவும் பிரதமர்வாஜ்பாய் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், இவரை காங்கிரஸ் ஏற்குமா என்று தெரியவில்லை. இவரை ஏற்க காங்கிஸ் மறுத்தால் அக் கட்சி சார்பில் வேறு வேட்பாளர்நிறுத்தப்படலாம். காங்கிரஸ் எதிர்த்தாலும் செகாவத்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தனக்கு பல்வேறு கட்சிகளின் ஆதரவைத் திரட்ட அவர் நேற்றே டெல்லி வந்துவிட்டார். பிரதமர் வாஜ்பாயையும் அவர் சந்தித்துப்பேசினார்.












Click it and Unblock the Notifications