திண்டுக்கல்: கிணற்றில் பிணமாக மிதந்த 2 பள்ளி மாணவர்கள் - தற்கொலையா?
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் 2 பள்ளி மாணவர்கள் ஒரு கிணற்றில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தனர். அவர்கள்சாவுக்கான காரணம் குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை.
திண்டுக்கல் முருகபவனத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ரவியின் மகன் கார்த்திக் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.
இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் பழைய இரும்பு வியாபாரி ரவியின் மகனான 7வது படிக்கும்மணிகண்டனும் கார்த்திக்கும் நெருங்கிய நண்பர்கள்.
மணிகண்டனுக்குப் படிப்பில் ஆர்வம் இல்லாத காரணத்தால் இனிமேல் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அவர்பிடிவாதம் பிடித்து வந்தார். இதையடுத்து அவருக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்வதாக அவருடைய தந்தைகூறியிருந்தார்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் கடந்த திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடந்தது. இந்தவிழாவுக்கு கார்த்திக்கும் மணிகண்டனும் சென்றிருந்தனர். ஆனால் அன்று நள்ளிரவு வரை இருவரும் வீட்டிற்குத்திரும்பவில்லை.
இருவரின் பெற்றோரும் உறவினர்களும் ஊர் முழுவதும் தேடிப் பார்த்தனர். அப்போது திண்டுக்கல்லில் இருந்துகொட்டப்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தின் கிணற்றில் மணிகண்டன் பிணமாக மிதந்துகொண்டிருப்பதை அவர்கள் பார்த்து அதிர்ந்தனர்.
உடனே தீயணைப்புத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மணிகண்டனின்உடலை மீட்டனர்.
அதன் பிறகு கிணற்றில் மூழ்கித் தேடிப் பார்த்த போது கார்த்திக்கும் பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது.அவருடைய உடலையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டுக் கொண்டு வந்தனர்.
அந்த இரு உடல்களையும் பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர்.
மணிகண்டனையும் கார்த்திக்கையும் யாராவது கொலை செய்து கிணற்றில் வீசி விட்டார்களா அல்லது இருவரும்சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications