தமிழகத்துக்கு தண்ணீர் தரவில்லை: கர்நாடகம் மீண்டும் மறுப்பு
பெங்களூர்:
கபினி அணைக்கு அதிக அளவில நீர் வந்தவண்ணம் இருந்ததால், அணையின் பாதுகாப்பு கருதியே அங்கிருந்தஉபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. அது தமிழகத்துக்குச் செனறது. மற்றபடி தமிழகத்துக்காக தண்ணீரைதிறந்துவிடவில்லை என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கர்நாடக அரசு விளக்கம் தந்துள்ளது.
தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவதற்கு எதிர்க் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கும் என்ற காரணத்திற்காகவேஎந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் கபினி அணையிலிருந்து கர்நாடக அரசு நீரை திறந்து விட்டது. இந்த நீர்தொடர்ந்து தமிழகத்துக்கு வந்தவண்ணம் உள்ளது.
இதையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு அரசு நீரை திறந்து விட்டதாகக் கூறி கர்நாடக எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.
ஆனால், கபினி அணையின் பாதுகாப்பு கருதியே அங்கு அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருந்த நீரைத் திறந்துவிட்டதாக நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீர்பாசனத்துறை அமைச்சர் பாட்டீல் விளக்கமளித்தார்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் பலத்த மழை காரணமாககபினி அணை கடந்த சில நாட்களில் வெகு வேகமாக நிரம்ப ஆரம்பித்தது. அணையின் மொத்த கொள்ளளவில் 3அடி நீர் குறைவாகவே இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருந்த நீர் தான் திறந்து விடப்பட்டது.
கபினி அணையைத் தவிர மற்ற அணைகளில் நீர் மட்டம் குறைவாகவே உள்ளது. தற்போது 4 அணைகளிலும்சேர்ந்து 15.14 டி.எம்.சி. நீர் தான் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே நாளில் 52.84 டி.எம்.சி. நீர் இருந்தது.
எனவே கர்நாடகத்திற்கே நீர் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.அனைத்துக் கட்சிகளும் கர்நாடக அரசின் இந்த நிலையை ஆதரித்துள்ளன. அதே போல கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் அதை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவும் முதல்வருக்கு அனைத்துக்கட்சிகளும் அனுமதி தந்துள்ளன என்றார் பாட்டீல்.
இதற்கிடையே கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் மேட்டூர் அணைக்கு நேற்று மாலையில் இருந்து வரத்தொடங்கியது. வினாடிக்கு 7,330 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications