ஜனாதிபதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி சற்று முன் தொடங்கியது. இன்று பிற்பகல் 3 மணிக்கு முடிவுஅறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" டாக்டர் அப்துல் கலாம் தான் என்று ஏறக்குறையமுடிவாகிவிட்டது.

கடந்த திங்கள்கிழமை (ஜூலை 15) நடந்த ஜனாதிபதி தேர்தலில் டாக்டர் அப்துல் கலாம் தவிர இடது சாரிக் கட்சிகள்நிறுத்திய சுதந்தரப் போராட்ட வீராங்கனையான கேப்டன் லட்சுமி சேகலும் போட்டியிட்டார்.

லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவின் 735 எம்.பிக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். மற்றும் அனைத்து மாநிலஎம்.எல்.ஏக்களும் தங்களுடைய வாக்குப்பதிவைச் செலுத்தினர்.

அனைத்து மாநிலங்களிலிருந்தும் வாக்குப் பெட்டிகள் ஏற்கனவே டெல்லி வந்து சேர்ந்து விட்டன.நாடாளுமன்றத்தின் 65ம் எண் கொண்ட அறையில் இந்த வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டன. அந்த அறைசீலிடப்பட்டு, அறைக்கு வெளியே ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது.ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும் ராஜ்ய சபா செயலாளருமான ஆர்.சி. திரிபாதி வாக்குப் பெட்டிகளின் சீல்களைஉடைத்துத் திறந்தார். பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.

பிற்பகல் 3 மணிக்குள் முடிவு அறிவிக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.

டாக்டர் கலாமுக்கு சுமார் 85 சதவீத வாக்குகளும் கேப்டன் லட்சுமி சேகலுக்கு சுமார் 15 சதவீத வாக்குகளும்கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள டாக்டர் கலாம் வரும் 25ம் தேதி ஜனாதிபதி மாளிகையில்பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொள்வார் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளும் அங்கு தீவிரமாக நடந்துவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+