வைகோவுடன் இல.கணேசன் சந்திப்பு: போலீஸ் ஒட்டுகேட்பு
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர்இல.கணேசன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
காலை வேலூர் சிறைக்குச் சென்ற இல.கணேசன் வைகோவை சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது சிறைக் கண்காணிப்பாளரும்உடனிருந்தார். இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். இந்தச் சந்திப்பின்போது இருவரும் பேசியதை கண்கணிப்பாளர்சென்னை மேலிடத்துக்கு அனுப்பி வைத்தார்.
வைகோவை சந்தித்துவிட்டு வெளியே வந்த கணேசன் நிருபர்களிடம் பேசுகையில்,
வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதால் தமிழக அரசு கலைக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறியிருப்பது தவறு. இந்த விவகாரம் அவ்வளவு மோசமாகிவிடவில்லை.
விடுதலைப் புலிகளை எதிர்க்கும் விஷயத்தில் பா.ஜ.கவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், வைகோவை பொடாசட்டத்தில் கைது செய்திருப்பதை கடுமையாக எதிர்க்கிறோம். இந்தக் கைது தேவையில்லாதது. மதிமுக தேச விரோத கட்சியல்ல.
மதிமுகவைத் தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு தான் முடிவெடுக்க முடியும்.
வைகோ கைது விவகாரத்தில் நீதிமன்றமும் சட்டமும் தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் நல்ல முடிவை எடுக்கும் என்றுநம்புகிறோம் என்றார்.
இந்தச் சந்திப்பு முடிந்தவுடன் அவர்கள் பேசிய விவரங்கள் உடனடியாக சென்னை காவல்துறை தலைமையகத்துக்குப் பறந்தது.இந்தப் பேச்சு விவரங்கள் மேலிடத்துக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications